தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய்
கடவுள் வாழ்த்து தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதந் தானாய் அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே வானாய்க் கால்அனலாய் புனலாய்அதில் வாழ்புவியாய் ஆனாய் தந்தனையே அருள்ஆர் அமுதந் தனையே! உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்களா அளவி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்ன வர்க்கேசர ணாங்களே! இயற்கையின் உயிராய் எங்கும் எழுந்தருள் இறையே போற்றி! செயற்கையின் சிந்தைக் கெட்டாச் செல்வமே போற்றி போற்றி! முயற்சியின் விளைவால் ஓங்கும் முதன்மையே போற்றி போற்றி! பயிற்சியில் நிர்ப்போர்க் கென்றும் பண்புசெய் பரனே போற்றி!! எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்தநல் லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம் ...